Posts

Showing posts from March, 2021

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -3

Image
வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைரம்' நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பின் தந்தாலும் அதன் சுவை குறையவே இல்லை. 'நான் ஷர்மி வைரம்'தலைவரின் வலைப்பூ வாசகர்களின் ஜாங்கிரி அதை அப்படியே சாப்பிட்டு விடுங்கள். கடலூர் ஜெயப்பிரகாஷ்.

24 சலனங்களின் எண். விமர்சனம்-5

Image
 எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் விமர்சனம் # 24 சலனங்களில் எண் # கேபிள் சங்கர் எழுதிய '24 சலனங்களின் எண்' சினிமாத் துறை குறித்த பல நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் உருவாகின்றன. பல படங்களில் அசோசியேட்டாக அனுபவம் வாய்ந்த ஒருவரும் வளர்ந்து வரும் இயக்குநர் ஒருவரும் ஒரே நாயகனை வைத்துப் படம் தொடங்குகிறார்கள். அந்த இரு படங்களின் தயாரிப்பும் வெளியீடும்தான் நாவல். தனது துறை சார்ந்த நாவல் என்பதால் நாவலாசிரியருக்குப் பல சம்பவங்களைத் துல்லியமாக எழுத வாய்த்திருக்கிறது. அவரே நேரில் பார்த்த உணர்ந்த பல விஷயங்களைத்தான் நூலில் எழுதியிருக்கிறார். துறை சார்ந்த சிலரிடம் சமீப காலங்களில் பரிச்சயம் இருப்பதால் என்னாலும் பல இடங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்தது. தமிழ் சினிமா உருவாகும் விதமானது கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பெரிதும் மாறியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த புத்தகங்கள் ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலகட்டத்தின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசுபவையாக இருக்கலாம். ஆனால் தற்காலத் தமிழ்த் திரையுலகைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. ஒரு சினிமா உருவாக 24 கலைகள் ஒன்...

பெர்முடா - விமர்சனம் -1

Image
  பெர்முடா. விமர்சனம்#1 மூன்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணங்களை இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார். எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள். Mohan Balu Thx sir