Posts

Showing posts from June, 2024

கறி தோசையும் நானும்

  கறி தோசையும் நானும் எனக்கு கறி தோசை என்றால் மிகவும் பிடிக்கும். முதன் முதலில் நான் கறி தோசை சாப்பிட்டது மதுரை கோனார் மெஸ்ஸில். அதுவும் பழைய கடையில். ஒரு பள்ளமான இடத்தில் நின்றபடி மாஸ்டர் தன் இடுப்பளவுக்கு மேலான தோசைக்கல்லில் தோசை மாவை தூக்கி வீசிய லாவகத்தில் வட்டவட்டமாய் ஊற்றும் ஸ்டைலாகட்டும், முட்டையை உடைத்து அப்படியே ஒவ்வொரு தோசையின் மேல் கரெக்டாய் விழுந்த லாவகத்தை வாய்பிளந்து பார்த்தபடி ரெண்டு கறி தோசை ஆர்டர் செய்தோம். என்னைப் பொறுத்தவரை கறி தோசை என்பது அவ்வளவாய் புளிக்காத தோசை மாவில் கெட்டியாகவும் இல்லாமல், தளதளவெனவும் இல்லாமல் ஒரு மாதிரி தளுக்கான பதத்தோடு, முட்டையை எடுத்து ஊற்றி, அதில் நன்கு வெந்த கறித்துண்டுகளை மாவு கீழ் பக்கம் வெந்து கொண்டிருக்கும் போதே மேலே மாசாலாவோடு வைத்து அழுத்தி, நன்றாக எண்ணெய் விட்டு, கீழ் பக்கம் கருகாத பதத்தில் எடுத்தி அப்படியே ஒரு திருப்பு திருப்பி, இன்னும் நன்றாக எண்ணெய் விட்டு, கறி, விறகு அடுப்பு என்றால் சிறப்பு. அன் ஈவனான வெப்பத்தில் திருப்பிப் போட்ட தோசையில் உள்ள கறி மெல்ல வேக ஆரம்பித்து கிரிஸ்பியாய் மாறும் போது எடுத்து ஒரு திருப்பி திருப்ப...

Life Goes On

  இரண்டு நாள் முன்பு மாலை வேலை செம்ம டிராபிக். என் காரை நான் கிட்டத்தட்ட உருட்டிக் கொண்டு வந்தேன். பின்னால் இருந்து ஒரு பைக்காரன் ஹாரன் அடித்துக் கொண்டே வந்தான். ரியர் வியூ மிரரில் பார்த்தால் என்னை ஓவர் டேக் செய்யும் எண்ணத்துடன் ஒரு சைக்கிள் மட்டுமே போகக்கூடிய கேப்பில் பைக்கை வைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். நான் சைட் மிரர் வழியாய் பார்ப்பதை அவன் பார்த்துவிட்டு, ஏதோ கத்தினான். காரின் கண்ணாடி ஏற்றியிருந்த படியால் அவன் பேசியது கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் கத்திக் கொண்டே என் வண்டியை அத்தனை கிடிக்கிப்பிடி டிராப்பிக்கில் இடது புறம் ஓவர் டேக் செய்து, ஜன்னல் பக்கம் நின்று “ஒத்தா.. வழிவிட மாட்டியா? கொன்றுவேன்” என்றான். முகம் முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. வெய்யில் வேறு மனிதன் கோபமாய் ஆவதற்கு ஏற்றார்ப் போல இருக்க, பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தேன். “ஒத்தா நிறுத்துடா.. வண்டிய.. நிறுத்துடான்னா” என்று கத்தினான். நான் பொறுமையாய் இரு வர்றேன் என்பத் போல வலது புறம் இருந்த பெட்ரோல் பங்கின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கினேன். எங்கே அவன் என்று அவனைப் பார்த்தால்...